வங்கதேசத்தின் அரசியல் மறுமலர்ச்சி: 2026-ன் புதிய அத்தியாயம்
தாரிக் ரஹ்மான் மற்றும் பேராசிரியர் டாக்டர் யூனுஸ் லண்டனில் சந்திப்பு
மற்றும் தற்போது 2026 பிப்ரவரி 12 -இல் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் என அந்த நாடு அடுத்தடுத்த நகர்வுகளுக்கு தொடர்ந்து அந்த நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது.தற்பொழுது இந்த நாடு ஒரு புதிய அத்தியாயத்தை எழுத தொடங்கியுள்ளது.ஆம் இன்று (பிப்ரவரி 17, 2026), வங்கதேசத்தின் புதிய பிரதமராகத் தாரிக் ரகுமான் (Tarique Rahman)பதவியேற்றுள்ளதன் மூலம் அந்த நாட்டின் புதிய அரசியல் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளது.இதைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இங்கு காண்போம்.
1. பின்னணி: 2024 மாணவர் புரட்சியும் அமைக்கப்பட்ட இடைக்கால அரசும்:
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேசத்தில் வெடித்த "மாணவர் எதிர்ப்புப் போராட்டம்" அந்நாட்டின் வரலாற்றையே மாற்றியது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவின் அரசு, இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தால் வீழ்ந்தது.ஆகஸ்ட் 5, 2024 அன்று ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை முகம்மது யூனுஸ் தலைமையிலான ஒரு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
சுமார் 18 மாதங்கள் மட்டுமே நீடித்த இந்த இடைக்கால ஆட்சியின் முக்கிய நோக்கமாக சீர்குலைந்திருந்த அரசியலமைப்பை சீர்திருத்துவதும், வெளிப்படையான தேர்தலை நடத்துவதும் என்ற கொள்கையை மையமாகக் கொண்டு செயல்பட்டது.
2. 2026 பொதுத்தேர்தல்: ஒரு ஜனநாயகத் திருவிழா
இடைக்கால அரசின் வழிகாட்டுதலின் பேரில் 2026 பிப்ரவரி 12 அன்று வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு நடந்த மிகவும் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலாக இது கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் சுமார் 60% வாக்குகள் மட்டுமே பதிவாகின இது 2024 சர்ச்சைக்குரிய தேர்தலை (42% வாக்குகள்) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள்:
இத்தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட கட்சிகள் முன்னிலை வகித்தன. ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் கட்சி கட்சி இத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
வெற்றி விவரம்:
தாரிக் ரகுமான் தலைமையிலான பி.என்.பி கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 299 இடங்களில் 212 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றன.
3. புதிய பிரதமர் தாரிக் ரகுமான்: ஒரு மீளுருவாக்கம்
தாரிக் ரகுமான்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலேதா ஜியா மற்றும் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரகுமான் ஆகியோரின் மகனான தாரிக் ரகுமான்
நீண்ட 17 ஆண்டுக்கால நாடுகடத்தப்பட்ட வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அதிகார மையத்திற்கு வந்துள்ளார். இவர் நாடு கடத்தப்பட்டதற்கான காரணமாக ஊழல், மிரட்டி பணம் பறித்தல், பண மோசடி, போன்ற காரணங்கள் அடுக்க வைக்கப்பட்டன.இதனால் அவர் சிறைக்குச் சென்று சித்திரவதைகளை அனுபவிக்க நேரிட்டது இதன் விளைவாக அவருக்கு முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு பிணை வழங்கப்பட்டது. சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்று அங்கே தங்கி "சுயமரியாதை நாடு கடத்தல்" (Self-imposed exile) வாழ்க்கையைத் தொடர்ந்தார்.லண்டனில் இருந்து கட்சியை வழிநடத்தி வந்த அவர், இப்போது மக்கள் செல்வாக்குடன் நாட்டின் தலைவராக உருவெடுத்துள்ளார். கடந்த 35 ஆண்டுகளில் வங்கதேசத்தின் முதல் ஆண் பிரதமர் இவராவார் என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல்.
4. ஜூலை சாசனம் மற்றும் அரசியல் மாற்றங்கள்:
தேர்தலுடன் சேர்ந்து, "ஜூலை சாசனம்" (July Charter) என்ற புதிய அரசியல் சீர்திருத்தத்திற்கான வாக்கெடுப்பும் (Referendum) நடத்தப்பட்டது. இதில் சுமார் 68% மக்கள் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம்:
1: பிரதமரின் அதிகபட்ச பதவிக்காலம் இரண்டு முறை மட்டுமே என தீர்மானிக்க வேண்டும்.
2: நீதித்துறையின் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
3: மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி உருவாவதைத் தடுக்கப் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
5. புதிய ஆட்சியின் முன்னுள்ள சவால்கள்:
புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தாரிக் ரகுமான் அரசுக்கு மலர் படுக்கை காத்திருக்கவில்லை; மாறாகக் கடுமையான சவால்கள் உள்ளன:
பொருளாதார மீட்பு: விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்துவது புதிய அரசின் முதல் கடமையாகும்.
ஊழல் ஒழிப்பு: முந்தைய ஆட்சிக் காலத்தில் நிலவியதாகக் கூறப்படும் ஊழல்களைக் களைந்து, நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டியது அவசியம்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு:
தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைத் தடுத்து, இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய கடமையாகும்.
சர்வதேச உறவுகள்:
குறிப்பாக இந்தியாவுடனான உறவை
மீட்டெடுப்பது மற்றும் முகம்மது யூனுஸ் காலத்தில் சற்றுத் தொய்வடைந்திருந்த இந்தியா-வங்கதேச உறவை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
முடிவுரை:
வங்கதேசத்தின் இந்தப் புதிய ஆட்சி மாற்றம் என்பது வெறும் ஒரு கட்சி மாறி மற்றொரு கட்சி அதிகாரத்திற்கு வந்ததல்ல; இது ஒரு தலைமுறை மாற்றத்தின் வெளிப்பாடு. "ஜென்-இசட்" (Gen Z) என்று அழைக்கப்படும் இளைஞர்களின் எழுச்சியால் உருவான இந்த மாற்றம், வங்கதேசத்தை ஒரு முழுமையான ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாரிக் ரகுமானின் தலைமையிலான அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, தெற்காசியாவில் ஒரு நிலையான மற்றும் வளர்ந்த நாடாக வங்கதேசத்தை உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாசகர் களம்:
மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் உருவான இந்த மாற்றம், தெற்காசியாவின் மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமையுமா? இளைஞர்களின் சக்தி அரசியலில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
உங்கள் கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் (Comment) பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்போம்!
கருத்துகள்
கருத்துரையிடுக