உலக பாதுகாப்பு அரண் சிதறுகிறதா? ஜெர்மனியிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள் - ஓர் அலசல்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டங்களில் ஐரோப்பாவின் பாதுகாப்பு அரணாக விளங்கிய அமெரிக்க ராணுவ இருப்பு , இன்று ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் திருப்பத்தைச் சந்தித்துள்ளது.அமெரிக்க அதிபர் " டொனால்ட் டிரம்ப்" தலைமையிலான நிர்வாகம், ஜெர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சுமார் 5,000 அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒரு ராணுவ நடவடிக்கையாக கடந்து செல்ல முடியாது.இது நேட்டோ (NATO) அமைப்பின் எதிர்காலம், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் ஈரான் - அமெரிக்கா மோதல் என பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு சிக்கலான " புவிசார் அரசியல்" நகர்வாகும். 1. ஏன் இந்த அதிரடி முடிவு? அமெரிக்க-ஜெர்மனி உறவில் வெடித்த திடீர் எரிமலை: இந்த அதிரடி முடிவிற்குப் பின்னால் சமீபத்திய ஈரான் - அமெரிக்கா போர்ச் சூழல் முக்கியப் பங்கு வகிக்கிறது. A. ஈரான் விவகாரம்: பிப்ரவரி 2026 -ல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்த ராணுவ நடவடிக்கைகளில் , ஐரோப்பிய நாடு...