​உயரும் பெட்ரோல் விலை! ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் தாக்குதல்: உலக நாடுகளின் அடுத்த அதிரடி என்ன?

தற்போதைய சூழலில் உலக அரசியலில்
அடுத்தடுத்து தொடர்ந்து பதட்டமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டணிக்கும் இடையே நிலவி வரும் போர் சூழலால்,மத்திய கிழக்கில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz)
தற்போது வரை மூடி உள்ளது.இதனால் ஒட்டுமொத்த சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக, உலக நாடுகள் வரலாறு காணாத எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
பற்றி எரியும் ஓமன் கடல்,ஹார்முஸ்
ஜலசந்தியின் தற்போதைய நிலவரம்:
             (ஹார்முஸ் ஜலசந்தி)
  உலக அளவில் கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் 20% முதல் 25% வரை இந்த குறுகிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.சமீபத்தில், இப்பகுதியில் பயணித்த வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் மீது ஈரானின் புரட்சிகர ராணுவ படை தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.இது ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தையும் முடக்க செய்துள்ளது.இதனால், சவுதி அரேபியா, குவைத், ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் விநியோகம் உலகச் சந்தையைச் சென்றடைய முடியாமல் தடைபட்டுள்ளது.
​2. கிடுகிடுவென உயரும் எண்ணெய் விலை :  ஸ்தம்பித்து நிற்கும் உலக நாடுகள்!
                இது ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பு என்பதையும் தாண்டி ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை அசைக்கக் கூடிய  சக்தியாக பார்க்கப்படுகிறது.
A. விலை ஏற்றத்தின் வேகம்: 
     கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.இந்தப் போரின் தாக்கத்தால்
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் 100$ டாலரைத் தாண்டியுள்ளது. 
B. உலக நாடுகள் ஸ்தம்பிப்பு:
     எரிசக்தி விநியோக தடையால் வளரும் நாடுகளில் இருந்து வல்லரசு நாடுகள் வரை அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கின்றன.இந்த மந்த நிலை உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா? என்ற அச்சம் உலக நாடுகளை தொற்றிக் கொண்டுள்ளது.
C. IEA-வின் அவசர நடவடிக்கை:
    இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவே, சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தனது அவசரகால இருப்பை வெளியிட முடிவு செய்துள்ளது. இது சந்தையில் ஓரளவு நிம்மதியைத் தருமா அல்லது விலை இன்னும் உச்சத்திற்குச் செல்லுமா என்பது உலக நாடுகளின் கவலையாக உள்ளது.
​3. இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
      இந்தியா தனது எரிசக்தி தேவையில்
80% இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது.
A. விலை உயர்வு அபாயம்:
     சர்வதேச சந்தையில் விலை உயரும்போது, உள்நாட்டிலும் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
B. LPG தட்டுப்பாடு: 
     இந்தியாவின் சமையல் எரிவாயுத் (LPG) தேவையில் பெரும் பகுதி இந்த ஜலசந்தி வழியாகவே வருகிறது. இதனால் சமையல் எரிவாயு விலையும் உயர வாய்ப்புள்ளது.
முடிவுரை:
சர்வதேச எரிசக்தி முகமையின் இந்த நடவடிக்கை தற்காலிகமாகச் சந்தையைச் சீர்செய்ய உதவலாம். இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் போர் பதற்றம் தணியாத வரை, உலகப் பொருளாதாரம் ஒரு நிலையற்ற தன்மையிலேயே இருக்கும். வல்லரசு நாடுகள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வருமா அல்லது போர் மேலும் தீவிரமடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாசகர் களம்:
தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த எண்ணெய் விலை உயர்வு, உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பகிருங்கள்.

கருத்துகள்